×

கேரளாவில் மேலும் 115 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 115 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நோயாளிகள் எண்ணிக்கை 1,749ஆக உயர்ந்துள்ளது. சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பரவி வரும் புதிய வகை ஒமிக்ரான் ஜேஎன் 1 கொரோனா கேரளாவில்கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் முதல் கேரளாவில் நோய் பரவல் அதிகமாகி வருகிறது. கொரோனா பாதித்து கடந்த இரு மாதங்களில் கேரளாவில் 10 பேர் பலியாகியுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

ஆனால் இவர்களுக்கு மேலும் பல நோய்கள் இருந்ததாக அவர் கூறினார். இந்நிலையில் நேற்று முன்தினம் கேரளாவில் 115 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கேரளாவில் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 1,749 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு முகக் கவசத்தை கட்டாயமாக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

The post கேரளாவில் மேலும் 115 பேருக்கு கொரோனா appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,China, Singapore ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...